ஒரு முஸ்லிம் தனது சகோதரருக்காக அவர் அறியாத விதத்தில் கேட்டும் பிரார்த்தனை அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.அவர் தனது சகோதரருக்காக இறைஞ்சும் போது வானவர்களில் ஒருவர் அவரின் தலையருகே இருந்து கொண்டு ஆமீன் கூறி "உனது சகோதரருக்கு கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்த அந்த நன்மை உனக்கும் கிடைக்கட்டுமாக" என கூறுகிறார்.