யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளான ஒரு சமூகத்தினர். காரணம் அவர்கள் சத்தியத்தை அறிந்திருந்தும் அதனை எடுத்து நடக்கவில்லை. கிறிஸ்தவர்கள் வழிதவறிய சமூகமாவர். அவர்கள் அறிவின்றி செயற்பட்டோர் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்
அறிவையும் செயல்பாட்டையும் ஒன்றுசேர பெற்றிருப்பதே கோபத்திற்குள்ளான மற்றும் வழிதவறியோரின் வழியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரே வழிமுறையாகும்.
யூத கிறிஸ்தவர்கள் அனைவரும் இறைகோபத்திற்கு ஆளானோர் ஆவர். என்றாலும் யூதர்களின் பிரத்தியேகமான பண்புகளில் ஒன்றாக இறை கோபமும், கிறிஸ்தவர்களின் பிரத்தியே பண்பாக வழிதவறி நடந்தமையும் காணப்படுகிறது.