சோம்பல் மற்றும் வயிறு நிறைந்திருத்தல் போன்ற காரணங்களினால் வாயைத் திறப்பதன் மூலம் ஒருவர் கொட்டாவி விட்டால் தனது கையை வாயில் வைத்து மூடிக்கொள்ளட்டும் என்று இந்த ஹதீஸில் வழிகாட்டுகிறார்கள். ஏனெனில் அவ்வாறு திறந்த நிலையில் ஒருவர் கொட்டாவிவிட்டால் ஷைத்தான் அவரின் வாயினுள்ளே சென்று விடுகிறான். வாயில் கையை வைத்து மூடுவது ஷைத்தானுக்கு தடுப்பாக அமைந்துவிடுகிறது.