இங்கு நபியவர்கள், செலவழித்தலின் சில வகைகளை விளக்கும் விதமாகப் பின்வருமாறு கூறுகின்றார்கள் : அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதற்கு செலவழிக்கும் தீனார், ஓர் அடிமையை உரிமையிடுவதற்காக செலவழிக்கும் தீனார், தேவையுள்ள ஓர் ஏழைக்கு செலவழிக்கும் தீனார், உனது குடும்பத்திற்காக செலவழிக்கும் தீனார். பின்பு நபியவர்கள், அவற்றில் மிகச் சிறந்தது, உனது குடும்பத்திற்காகவும், உனது செலவுக்கு உட்பட்டவர்களுக்காகவும் செலவழிக்கும் தீனாராகும் என்றும் கூறுகின்றார்கள்.