நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி வைத்தார்கள். அதற்கு தலைவராக அபூ உபைதா (ரழி) அவர்களை நியமித்தார்கள்.அதாவது குறைஷியர்களுக்கு உணவுவையும், வாட் கோதுமையையும் சுமந்து செல்லும் ஒரு வியாபார கூட்டத்தை எதிர்கொள்வதற்காக தயார் செய்யப்பட்ட படைப்பிரிவிக்கு தலைவராக அபூ உபைதா ரழி அவர்களை நியமித்தார்கள்.அவர்களிடம் ஈத்தம் பழங்கள் நிரப்பப்பட்ட ஒரு தோலினாளான பையொன்றையும் வழங்கினார்கள் அவர்களின் தலைவர் கொண்டு சென்ற உணவுப் பொருட்கள் குறைவாக இருந்ததனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஈத்தம் பழம் கொடுத்தார்கள் அதனை அவர்கள் வாயில் இட்டு சுவைத்து நீரை அருந்திக்கொண்டது மட்டுமல்லாமல் ஒட்டகம் சாப்பிடும் மரஇலையையும் தங்களது தடியினால் அடித்துப் பறித்து அதன் சொரசொரப்பான தன்மை நீங்குவதற்கு நீரில் நனைத்து உண்டார்கள். அவர்கள் கடற்கரையை அடைந்த போது அங்கே மணல் குன்றை போன்ற ஒன்றை கண்டனர். அதன் அருகே சென்று பார்த்தபோது அம்பர் எனும் பெயரால் அழைக்கப்படும் பெரிய மீனாக இருந்தது. குர்ஆனின் கூற்றின் அடிப்படையில் தானாக இறந்த பிராணிகளை சாப்பிடுவது ஹராம் என்பதினால் அதனை சாப்பிடுவதை அபூஉபைதா ரழி தடுத்தார்கள்.பின்னர் நிர்ப்பந்த நிலையில் மரணித்த பிராணிகளை சாப்பிடுவது ஆகும் என்பதினாலும், அவர்களின் பிரயாணம் அல்லாஹ் அனுமதித்த விடயத்திற்காக இருந்ததினாலும் அவரின் ஆய்வு முடிவை மாற்றிக் கொண்டு அதனை சாப்பிட அனுமதித்தார்கள். தாமாக செத்த கடல் பிராணிகளை சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டது என்ற விடயம் அவர்களுக்கு தெரியாமலிருந்தது. நிர்பந்தத்தை ஆதாரமாகக் கொண்டு அதனை சாப்பிட்டது மட்டுமல்லாமல் அதனை மதீனாவிற்கும் கொண்டுவந்தார்கள்.இந்த விடயத்தை நபியவர்களிடம் குறிப்பிட்ட போது அதனை அங்கீகரித்து அதிலிருந்து நபியவர்களும் சாப்பிட்டார்கள்