நபி (ஸல்)அவர்கள் தபூக் யுத்தத்திலிருந்து ஸஹாபாக்களுடன் திரும்பி வரும்போது மதீனாவுக்கு அருகாமையில் அமைந்துள்ள 'தனியதுல் வதாஃ' எனும் இடத்திற்கு நபியவர்களை வரவேற்பதற்காக அவர்கள் (ஸஹாபாக்கள்) புறப்பட்டுச் சென்றார்கள்.காரணம் யாதெனில் நபி ஸல் அவர்களையும்,போரில் கலந்து கொண்டவர்களையும் மகிழ்வூட்டவும்,அவர்களின் மனதை சாந்தப்படுத்தவும்,போருக்குச் செல்லாது இருப்போருக்கு ஆர்வமூட்டவுமாகும்.