அல்குர்ஆன் அவமதிப்புக்கு உட்படும் எனும் அபாயம் இருப்பின் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக்கொள்ளதாக இறை நிராகரிப்பாளர்கள் வாழும் பிரதேசங்களுக்கு அல் குர்ஆனை எடுத்துச் செல்வதை நபி ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆனால் அவ்வாறான அவமதிப்புக்கு பெரும்பாலும் உட்படாது என இருக்கும் நிலையில் அல் குர்ஆனை எடுத்துச் செல்வது அனுமதிக்கப்பட்டது.