அப்துல்லா-அல்-அன்ஸாரி (ரழி) அவர்களின் மகன் அபூ அப்துல்லாஹ் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸலல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'நான் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றி, ரமழானில் நோன்பையும் நோற்று, ஹலாலை ஹலாலாக்கி, ஹராத்தை ஹராமாக்குகின்றேன். இதற்குமேல் அதிகமாக நான் எதுவும் செய்யவில்லையாயின், இந்த நிலையில் நான் சுவர்க்கத்தில் நுழைவேனா? என்று எனக்குக் கூறுங்கள் என வினவினார்'. அதற்கு நபியவர்கள் 'ஆம்!' என்று பதிலளித்தார்கள்' அதற்கு அந்த மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக இதற்கு மேலதிகமாக எதனையும் நான் செய்யமாட்டேன் என்று கூறினார். சரியானது - இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

இந்த ஹதீஸில்,ஒரு மனிதர் உபரியான தொழுகைளை தவிர்த்து கடமையான ஐவேளைத் தொழுகைகளை மாத்திரம் தொழுபவராகவும், உபரியான நோன்புகளைத் தவிர்த்து கடமையான நோன்புகளை மாத்திரம் நோற்பவராகவும், ஹலாலானவை ஹலால் என ஏற்று அவற்றை செய்தும் ஹராமானவை தவிர்க்கப்படவேண்டியவை என்பதை ஏற்று அவற்றை தவிர்ந்தும் இருப்பாராயின்; அவர் சுவர்க்கம் நுழைவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • ஒரு முஸ்லிம் கட்டாயக் கடமைகளைச் செய்து, ஹராமானவற்றை (தடுக்கப்பட்டவைகளை )செய்வதை விட்டுவிடுவதில் ஆர்வம் கொள்ளவதுடன் அவர்; எப்போதும் சுவர்க்கம் நுழைவதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.
  • அனுமதிக்கப்ப்ட ஹலாலான வற்றை செய்தல் அதனை ஹலால் என்பதை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் ஹராமானவை -அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவை தவிர்த்துக் கொள்வதும், அது ஹராம் என்பதை ஏற்று நம்புவதன் முக்கியத்துவத்தையும் இந்த ஹதீஸ் சிலாகித்துப் பேசுகிறது.
  • கடமையானவற்றை செய்வதும், தடைசெய்யப்பட்டவற்றை -ஹராமானவற்றை- விட்டுவிடுவதும் சுவர்க்கம் நுழைவதற்கான ஒரு வழியாகும்.