பஜ்ர் மற்றும் அஸ்ர் ஆகிய குளிர்ந்த இரு நேரத் தொழுகைகளில் ஆர்வம் கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவுருத்துகிறார்கள். இவ்விரு தொழுகைகளையும் உரிய நேரத்தில் ஜமாஅத்துடன் உரிய முறையில் ஒருவர் நிறைவேற்றி வந்தால் அவர் சுவர்க்கம் பிரவேசிக்க இத்தொழுகைகள் காரணமாக அமையும் என்ற நட்செய்தியை கூறுகிறார்கள்.