நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதர்களுக்கு அதிகமாக தௌபா (பாவமீட்சி) மற்றும் இஸ்திஃபார் (பாவமன்னிப்புக் கோருதல்) செய்யுமாறு வலியுறுத்துகிறார்கள். தனது முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருந்த நிலையிலும் தான் ஒரு நாளைக்கு 100 தடவைக்கு அதிகமாக தௌபா மற்றும் இஸ்திஃபார் செய்வதாக தன்னைப்பற்றி நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது நபியவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுபடுவதிலும் பணிவாக நடந்து கொள்வதிலுமுள்ள அவர்களின் நிறைவான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.