இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை நோக்கி எவ்விதமான ஆயுதத்தையும் கொண்டு சைக்கினை செய்வதை எச்சரிக்கின்றார்கள். ஏனெனில், அவன் அறியாமலேயே, ஷைத்தான் அவனது கையில் ஆயுதத்தை உசுப்பத் தூண்டிவிட, அவன் தனது சகோதரனைக் கொலைசெய்யவோ அல்லது துன்புறுத்தவோ செய்யலாம். விளைவாக, நரகப் படுகுழியில் அவனைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பாவத்தில் அவன் வீழ்ந்துவிடலாம்.